Friday, November 05, 2010

வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...

"ஆக்கபூர்வ"வரலாறின் வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...


"வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!
"

"நாணயவான் வாறாரூ செம்பை எடுத்துவை, உள்ளே!"



என்றுரைத்துக் கட்டியமொன்று கடை-வாய் கிழித்து:


ன்றெமது காலச் சூழலானது சூதுநிறைந்த கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உளவியற்றாக்குதல்-காயடித்தல்வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.


இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படுவேண்டும்.


பாரதக் கரச் சேவைக்கு "பாரு நான் வந்தேன்"என்றபடியே பாட்டுக்கட்டும் பெருமாள்களுக்குப் பல்லவி எடுத்துவிடப் பெரி-அரிய,வலிய-சுழிய சுண்ணாம்பு டப்பாக்களும் களமாடிச் சேர்க்கும் கூட்டமெல்லாம் "மண்டை மூட்டைகளை" மறந்து குலாவிக் குஞ்சம் முடிய...நாமும் நரகத்திலிருந்து அவர் பாதம் நோக்கி-நோக்கி....


அவர் விபரஞ் சொல்ல முனைந்து...


சிங்களமும் சினைகொள் சங்கமித்தையும்களிகொள்பொழுதுக்குள்...




மண்டைகளில் தடம் புரண்ட விரல்களின் நர்த்தனத்துள் குருதி நெடில்ஓய்ந்தே போனதென்றால் அப்பப்ப மூக்கும் சளிகட்டிக்கொண்டதாக எடுத்தாண்டு கொள்(ல்)க! முன்னைய அரிய க(கொ)லைக்காகப் பின்னைய பொழிவுகள் எல்லாம்-எல்லோர் பெயராலும் வாசித்து,வாசித்து வஞ்சிக்கவென...இதற்குள் கூழ்ப்பானைப் பல்லியாக விஸ்வலிங்கம் சிவலிங்கம், வினை தீர்க்கும் வேலொடு இராமராஜ பகவதர் அண்ணாச்சி,படு அமர்க்களமாக மந்திகள்கூட்டு.பாரிசீல் சந்திப்பு,வானொலியில் வஞ்சிப்பு என்றெல்லாப் பக்கமும் வரதரின் வாய்மொழிப் புலமைகாண் குஞ்சுகள்...


அடாத மழை பொழியுங்கால் விடாத நாடகம் நடாத்தியே காட்டும் ஜில் ஜில் சோனியா-ராஜபக்ஷ தியேட்டர் கம்பனி,நடுவினில் கோமாளிக் குஞ்சுகளாகக் கொக்குத் தலையில் வெண்ணை தடவிப்..."பேச்சு வார்த்தை"பாடம் நடாத்த தென்கோடிப் பேரரசர் தெவிட்டாத டக்ளஸ் மாத்தையா.கிழக்குத் தமிழ் செழித்தோங்க ஜனநாயகப் பசளையிடும் பிள்ளையாரூ-கருணாகர மாத்தையா சிறப்பு அதிரடிப் படைகள் திரண்ட வெண்ணையில் முகத்தைப் புதைத்தபடி வரதராஜ பெருமாளு...இழவு வீட்டில் பெயர்ப் பலகைத் தட்டியை நிறுத்திய ஒரு கணப் பொழுதில் ஓய்ந்தது யுத்தம்,ஒழிந்தது பஞ்சம் கிழக்குக் குடிசைகளுக்குள்-வடக்கு பங்களாக்குள்...அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டிய முள்ளிவாய்க்கால் பேரரசர் பிரபாகரச் சக்கரவர்த்திக்குப் பின்னாளில் மண்டை பிளந்து துட்டக்கைமுனுவைக் காட்டிய கேடிகளில் பெருமாளும் ஒருவரெனக் கொண்டே தீரவேண்டுமெனப் பொன் கரம் கூப்பிப்பொருளுரைக்கும் நக்கீரப் பேரர்களது நாவலிக்கும் நர்த்தனத்துள்நஞ்சு வைக்கும் நல்ல பொழுதுகளும் நம்மை நெருங்கும்.


முள்ளி வாய்க்காலில் கிள்ளி வைத்த தலையும் பிளந்து,தாகம் தொலைத்த துட்டக்கைமுனுவுக்கு சிங்களத்தில் எடுத்துச் சொல்ல சிங்களமும் கற்றுத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தர வந்துள்ளார் தங்கத் தலைவர் வரதராஜ பெருமாளு.தெவிட்டாத தென்பாண்டித் தமிழிலுரைக்கும் அவர் பாலான "புகழ்" மாலை கட்ட வட்டக் கலரில் வர்ணந்தீட்டவும்"ஆக்க பூர்வமான" வரலாறொன்றுண்டெனச் சொல்லப் பலருண்டு பாரீசு மாநாகரில்-மாத்தையா மகிந்தா மடக்கி வைத்த செருப்புக்குப் பட்டில குஞ்சமெனத் "தடுக்குப் பாய் எடுத்து உள்ளே வை நாணயவான் வாறானெனச் சொல்ல" வம்பு -ஏன்? ...ம் கொட்ட எங்களுக்குஞ் சந்தர்ப்பம் வருகிறது.இந்த ...ம்---க்குள் பம்முகிற பேரவா பின்னைய பொழுதொன்றில் காகோலை கொண்டெவரை கொளுத்துமோ யான் அறியேன் அச்சோபாவே!



விதியே விதியே வினை முடிப்பாயோ?விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கும் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைந்தது,சிரித்த தந்தையின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க,கடுகு தேடிய தாயோ"மாவீரர் மரணம்"அற்ற வீடுகளும் இருக்கக் கண்டாள்.மடியிலே சுமைகொண்ட புலம் ஐந்தும் வதை செய்யப் புக்கினாள் தேசியக் கோட்டை அன்று!செம்மறிவுக் குலப் பேரரசன் முன்னாளும் இன்னாளும் முதலமைச்சுப் பொடிசூடிய திம்புத் திட்டத்து தும்புக் காவடிக்குத் தோள்கொடுத்தான் கொரிலாக்குஞ்சு!பாரதமே-பாரதமே பார் நீ பக்காப் படைப்பு நிலைக் களன்தொடு பங்காளிப் பேரிரைச்சலை!பல்லாக்குத் தூக்க இப்படியும் ஒரு கூட்டம்.பரதேசி-பரதேசி, மோட்டுக்கணக்கொன்றைக் கூட்டி நீ கழிக்கையியே சொருடிங்கர்தம் பூனைக் குற்றுயிரும் பெட்டிக் கதிர் வீச்சும் சுட்டும் பொழுதுக்குள் வாழ்தலும்-சாதலும் ஒருதடவையில்... தமிழ்ப்பெருங்குடியும் இங்ஙனமே-இங்ஙனமே!


கடன்பட்ட நெஞ்சு:


முன்னொரு காலத்தில் முக்கி-முக்கி நானெழுதிய பிச்சைப் பொடி நடைக்குள் குப்பர உன்னை அமுக்கி:


"இராணுவம் தேசியக் கொடிக்கு மட்டும் மரியாதை செய்யும் பட்சத்தில் தனி நபரின் மரணம் எதையோ உரைத்துச் சொல்கிறது".-காப்டன் கூறிக்கொணடான்


"ஒரு இராணுவப் படையணி நகரொன்றை மட்டும் பிடித்து எதிரியை வேட்டையாடும்போது இவ்வூழ்வினையுள் ஏதோவொன்று நிலவுகிறது."-ஜெனரல் கூறிக்கொண்டான்.


தேசாபிமானி கூறினார்:-" இறுதி மனிதன் இருக்கும்வரை நாம் போராடிச் சாகவேண்டுமானால்,இச் சாவு தாய்நாட்டிற்காக மட்டும் உபயோகமாக வரவேண்டும்".


தூரநோக்குடைய பண்பாட்டு வரலாற்றியலாளர் தூரப்பார்த்துவிட்டுக் கூறுகின்றார்:" எப்போதாவது இரு நாடுகள் -இரு இனங்கள் சுயமாகச் சிதைவுற்றுப்போனால்-அவை வீணான காரணங்களுக்காகச் சிதைவுற்றுப்போகவில்லை.உலகம் தன்னைத் தானே ஞாபகப் படுத்திக் கொள்வதும்,புதிதாய் மலர்வதும்,மேல்நோக்கி வளர்வதும் வேண்டும்.கூடவே தனது இரத்தக்கறை படிந்த மனித வரலாற்றை கழுவியாகவேண்டும்".


முதிர்ந்த புத்திஜீவி தனது குளிர்ந்த விரல்களால் நீண்ட தாடியைத் தடவியபடி:-" குழப்பம் நிறைந்த பழைய முதலாளியத்தை- நவகொலனித்துவத்தை எடுப்போம்,உலகம் பூராக மீளவும் இவர்களால் குற்றச் செயல்கள் செய்ய எப்படிச் சாத்தியமாச்சு?தோட்டத்துக்குப் பசளையிடுவதுபோன்று மனிதம் பலியாக்கப் பட்டு-கொலையாக்கப்பட்ட பூமிப் பகுதியை மூடி மறைத்து, காத்திராது தங்கள் அறுவடையை செழிப்பாக்கி வளர்த்தெடுக்கிறார்கள்.கூடவே பாசாங்கு விளையாட்டுப் போட்டிகளால் வேறு மக்களைச் சுரண்டியும்,அவர்கள் மூளையைச் சலவை செய்தும்...!" மீளவும் தலையைச் சொறிந்தார்,வானத்தைப் பார்த்தபடி.


கடவுள் கூறிக்கொண்டார்:-" எனது சூரியக் குடும்பம் இருபத்தி நான்காவதுக்கு,அரேபியும்-ஆங்கிலமும்-மூத்த குடித் தமிழும்... தொலைந்தது இந்தப் பூமிக் கிரகம்.இது சௌபாக்கியமான அர்த்தம் நிறைந்ததாக இப்போது தோன்றுகிறது. சிலவேளை இப்படித் தொலைந்தது நன்மையே! என் விருப்பத்தின் பொருட்டு எப்போதாவது இந்த எல்லாச் சூரியகுடும்பத்தையும் பிரபஞ்ச ஒழுங்குக்கு பொருந்தி வரக்கூடியதாக மாற்றிக்கொள்ள..." ஆத்திரப்பட்டுக்கொண்டார்.

"என் பிள்ளைகள் பத்திரமாக மீளவும் வீடு திரும்புவார்களென்றால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடலாம்".- வன்னியிலிருந்து திருமதி.சுப்ரமணியம் கூறிக்கொண்டார்-அன்றும்,இன்றும்.

வேறு-வேறு:

கொய்பிள்ஸ்சும் தோல்விகாண,கோவேந்தர் வரதருக்கு வாழ்த்துரைக்க வந்தானே எம் மகராசா புஷ்பா அண்ணாவின் புனைவொன்றைக்காவிக் காவி... கப்பலேறிக்கொடும் அஞ்ஞாதவாசத்துள் கொள்ளி வைக்கத் திண்ணைக்கு வந்தான் மண்டையன் வரதராஜப் பெருமாளு.தள்ளி நில்!

வேறுக்கும் வேறான வேடம்:


கே.பி.மாமா மோப்பம் பிடித்து மெல்லச் சொல்லும் அபிவிருத்தியில் எட்டிப் பிடிக்கும் புனர்வாழ்வை புலிக்கு வால் பிடித்த பின்னைய பன்னப் பாய் படுக்கைக்குரியதுகளுக்கு அம்பு வைத்து ஆட்டுகிறார் அவர்கள் புலிப் போராளிகளென. புண்ணாக்குகளும் நம்பிக்கொண்டிருக்க நாடகத்தின் தொடர்கள் நல்ல நடிகர்களைத் தேடுகிறது.இங்கும் அங்குமென சந்திப்பு-ஒத்திகையென மண்டையன் குழுத் தலைவரோ அந்தப் பெருமாளுக்கே தண்ணிகாட்டி மன்னிப்பு வேறு... ரீ.பீ.சீ வானொலியும் வகுப்பெடுக்கும் பித்தளைத் தங்கம் பின்னைய இரவில்மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார வகுப்பெடுக்க சிரசுகள் பறித்த ஆவிகள் தொடரும் அந்தா-இந்தா,முன்னாள் முதலமைச்சர் மண்டையன் குழுவின் வேட்டைப் பொழுதில்...


15 வருடத்து அஞ்ஞாத வாசத்து "தோ லருக்கு"ப் பொன்னாடை போர்த்துவதற்கு இன்னொரு பொதுவரங்குகொள் நல்ல கலைஞர்கள்-கவிஞர்கள் பெருக்கெடுக்க பண் ஊதத் தேவையென பெரு விளக்கஞ் செய் புன்னையில்லா பேரளகர்களும் இங்கே உண்டு-உண்டு!"கொல்லையில் கிடக்கும் மண் குடத்தை எடுத்து நீ உள்ளே வை-உள்ளே வை!"கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டால் நீ அழுதுண்டு அடுக்கிவிடு அப்பன்,ஆத்தையில்ல ஊருக்கு அடுப்பெரிக்கவே வக்கில்லையென.

கொட்டைபோட்ட சிரசு அறுப்பர்கள் மொட்டை போட்டு நாமமிட 15 ஆண்டுகளுக்கு வகுப்பெடுத்து நம்மையெல்லாம் தேடிக்கொள்ள நடரோட்டில் ஆண்டி வேறு அகப்பட்டானே!

ஆட்கொள்ளல் கண்டு அரண்ட பொழுது:

"டொலர்களில் பரிமாற்றும் மேற்குலகில் செய்வததென்றால் பிடித்தசிறார் வீடு மீள்வாரென" தமிழ் நியாயம் சொல்ல நிலவு, அடிவானில் அமிழ்ந்து, வானம் சிவந்தது-அன்று! இன்று, வர்ணக் கலவையில் வகுப்பெடுக்கும் தோரணையில் எங்கள் நாவலனும் என்ன அழகோ எப்படியழகோ!எட்டுத் திசையும் இருண்ட பொழுதில் பாரதத்தின் பாட்டி "காக்க வடை சுட்ட கதை கேளென" பக்குவமாய் பாக்குத் தறித்து பாடையில் போக்குவதற்கு தேசிக்காய் தேடியெடுத்து அரிந்து அப்பால் வீசுகிறாள்.


பிற்குறிப்பு:

எனது கைகளிலிருந்த வறுத்த வேர்க்கடலை வாயிலிருந்து ஏதோவொரு அமிலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இலங்கையரசு தமிழ் மண்ணை மட்டுமல்ல அழித்து வருகிறது என்ற தொடரில்... வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழருக்குச் சொந்தமில்லையென்றும் அழுது வடிந்த ஜீ.ரிவி மக்களை,குடும்பத்தலைவரை,சிறார்களை,பெண்களைக்குதறி... பத்திரிகையாளரைக் கைதும் செய்து கஷ்ரடியில் வைத்துக் கொல்வதென்றதை விட்டுவிட்டதாகப் புலிகள் சர்வதேசத்துகுச் சொல்லும் செய்தியும் தோன்றக் கண்டார் கையிலை மலையில்.


வாஸ்த்தவம்தான்!,வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்கள் "அவர்கள்"மட்டுமல்ல நம்ம தேசத்துச் சிங்கள-தமிழ் "தோலர்களும்"தாம்.

"தாங்காதம்மா தாங்காது,கொலைத்தாகம் தீர்ந்து போகாதம்மா போகாது!"தம்பிக்குத் தங்கைக்கு பெட்டிக்குள்ள பெரு வீரம்,பேரென்னவோ"பெரியாருக்கு"-போருக்குள்ளே

புகழுண்டு, ஊருக்குள்ளே இழவுண்டு!

நோட்டு கனவு கொட்டக் கொட்ட வடக்கு மறுத்துக் கிழக்கைப் பிரி,வலிந்த பக்ஷ வாரித்தந்த "தீர்வை"மாகணங்களுக்குள் கண்டபோது சபைக் காச்சல் ஏறிய டிகிரியில் சொக்கிய குருதி நினைவைப்பறிக்க மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய... வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!


ப.வி.ஸ்ரீரங்கன்

05.11.2010

No comments: